/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நிழற்குடையின்றி அவதி, மின்கம்பத்தால் சிரமம்; வத்திராயிருப்பு பேரூராட்சி 5வது வார்டு குறைகள் நிழற்குடையின்றி அவதி, மின்கம்பத்தால் சிரமம்; வத்திராயிருப்பு பேரூராட்சி 5வது வார்டு குறைகள்
நிழற்குடையின்றி அவதி, மின்கம்பத்தால் சிரமம்; வத்திராயிருப்பு பேரூராட்சி 5வது வார்டு குறைகள்
நிழற்குடையின்றி அவதி, மின்கம்பத்தால் சிரமம்; வத்திராயிருப்பு பேரூராட்சி 5வது வார்டு குறைகள்
நிழற்குடையின்றி அவதி, மின்கம்பத்தால் சிரமம்; வத்திராயிருப்பு பேரூராட்சி 5வது வார்டு குறைகள்

வேண்டும் தாமிரபரணி குடிநீர்
-ராஜலட்சுமி, குடியிருப்பாளர்: தற்போது பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால் குடிப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை.
மின்கம்பத்தை இடமாற்றுங்க
-கருப்பசாமி, குடியிருப்பாளர்: நாடார் தெருவின் கிழக்கு பகுதியின் மையப் பகுதியில் மின்கம்பம் இருப்பதால் ஆட்டோக்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.
பேரூராட்சியில் கோரிக்கை
-பழனியம்மாள், வார்டு உறுப்பினர்: வார்டில் உள்ள வாறுகால்கள் மேம்படுத்துதல், சேதமடைந்த தண்ணீர் தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், நாடார் பஜாரில் பயணியர் நிழற்குடை குடை அமைத்தல், ஆண்கள், பெண்களுக்கு சுகாதார வளாகம் அமைத்தல், வீடுகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்குதல், தெருவில் பொது குடிநீர் குழாய் அமைத்தல் உட்பட பல கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.