ADDED : ஜூன் 25, 2025 07:13 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன் கோவில் சமத்துவபுரத்தில் வசிப்பவர் மகாதேவன் 43, சமையல் மாஸ்டர்.
இவர் தனது தாயுடன் வசித்து வந்த நிலையில் ஜூன் 19ல் தாய் இறக்க, தனக்கு ஒரே ஆதரவாக இருந்த தாயும் இறந்து விட்டதால் மனவேதனையில் இருந்த மகாதேவன், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.