Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மாவட்டத்தில் வீணாகுது இறைச்சி கூடங்கள்

மாவட்டத்தில் வீணாகுது இறைச்சி கூடங்கள்

மாவட்டத்தில் வீணாகுது இறைச்சி கூடங்கள்

மாவட்டத்தில் வீணாகுது இறைச்சி கூடங்கள்

ADDED : ஜூன் 18, 2025 04:06 AM


Google News
Latest Tamil News
சுகாதார முறையில் மக்களுக்கு இறைச்சிகளை வழங்க நகராட்சிகள் லட்சக்கணக்கான ரூபாயில் நவீன இறைச்சி கூடங்களை அமைத்துள்ளது. இந்த இறைச்சி கூடங்களில் வந்து தான் ஆடுகளை வெட்ட வேண்டும். கால்நடை மருத்துவர் பரிசோதித்து சீல் செய்த பிறகு வெட்ட வேண்டும். முதல் நாளே அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆடு இறைச்சி கூடத்தில் இருந்து விற்பனை செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லும் போது ஈ மொய்க்காமல் பாதுகாப்பான பெட்டிகளில் மூடி கொண்டு செல்ல வேண்டும். நகராட்சி வைத்த முத்திரை உள்ள இறைச்சியை கடைசியாக விற்பனை செய்ய வேண்டும். அதுவரை முத்திரை உள்ள இறைச்சி காட்சிக்கு வைக்க வேண்டும். நவீன இறைச்சி கூடத்தில் நாய்கள், பூனைகள் நுழைய விடக்கூடாது.

ஆடுகள் தவிர பிற மாமிசங்கள் வெட்டப்படக் கூடாது. காலை 8:00 மணிக்குள் வெட்டப்பட வேண்டும். ஆடு வெட்டுபவர்கள் உரிமம் பெற்று இருக்க வேண்டும். இது போன்று பல விதிகளுக்கு உட்பட்டே நவீன இறைச்சி கூடங்கள் ஒவ்வொரு நகராட்சியிலும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது.

ஆனால் இறைச்சி கடைக்காரர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி இந்த கூடங்களுக்கு வருவதை தவிர்த்து விட்டனர். நகராட்சி அதிகாரிகளும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கட்டப்பட்ட இறைச்சியை கூடங்கள் அனைத்தும் காட்சி பொருளாக மாறி பல சேதம் அடைந்தும் இடியும் நிலையில் உள்ளது.

ஒரு சில நகராட்சிகளில் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள இறைச்சி கூடத்தை மீண்டும் மராமத்து பணிகள் செய்து வருகின்றனர். நகராட்சிகளின் சுகாதாரப் பிரிவு முழுமையாக இறங்கி சுகாதாரமான முறையில் நகராட்சி இறச்சி கூடத்தில் தான் ஆடுகளை வெட்ட வேண்டும் என இறைச்சி கடைக்காதவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும்.

பெரும்பாலான ஊர்களில் சுகாதாரமற்ற முறையில் பாதுகாப்பு இல்லாமல் ஆடுகளை ரோட்டோரங்களில் திறந்த வெளியில் வெட்டி விற்பனை செய்கின்றனர். இறைச்சி கழிவுகளை ஆங்காங்கு அருகில் உள்ள வாறு கால்களில் போட்டு விடுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இது குறித்து இறைச்சி கடைக்காரர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நவீன இறைச்சி கூடங்களில் தான் ஆடுகளை வெட்ட வைப்பதோடு, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மக்களுக்கு சுகாதாரமான இறைச்சி கிடைக்க நடவடிக்கை வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us