சாத்துார்: சாத்துார் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
தலைவர் ராஜு தலைமை வகித்தார். செயலாளர் முத்து குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் உஷா தேவி வரவேற்றார்.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியின் தொழில்நுட்பவியல் உதவி பேராசிரியர் மணிமாறன் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். மாணவிகள் அஸ்வினி, தஷ்மின், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாணவர் விக்னேஷ் கண்ணன் நன்றி கூறினார்.