Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சீனிவாச பெருமாள் கோயிலில் பாலாலய யாக சாலை பூஜை

சீனிவாச பெருமாள் கோயிலில் பாலாலய யாக சாலை பூஜை

சீனிவாச பெருமாள் கோயிலில் பாலாலய யாக சாலை பூஜை

சீனிவாச பெருமாள் கோயிலில் பாலாலய யாக சாலை பூஜை

ADDED : ஜூலை 01, 2025 02:18 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பாலாலய யாகசாலை பூஜைகள் நேற்று முதல் துவங்கியது.

இக்கோயிலில் ஜூலை 14 காலை 5:30 மணி முதல் 6:00 மணிக்குள் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், காலை 6:00மணிக்கு மேல் 6:15 மணிக்குள் ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

நேற்று காலை 9:00 மணிக்கு கோயிலில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பாலாலய யாகசாலை பூஜைகளை கோயில் பட்டர்கள் வாசுதேவன், கிரி, ரகு பட்டர்கள் செய்தனர். விழாவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், அறநிலையத்துறை அலுவலர்கள், பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

பாலாலய பூஜைகள் துவங்கியதால் ஜூலை 13 வரை மூலவர் தரிசனம் கிடையாது. அதற்கு பதிலாக பாலாலயத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், பட்டர்கள் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us