ADDED : ஜூன் 20, 2025 12:09 AM
விருதுநகர்: விருதுநகர் வச்சக்காரப்பட்டியில் மகளிர் குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம், பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டது.
விருதுநகர் வச்சகாரப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் மகளிர் குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம், பல்பொருள் அங்காடியை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், குழுக்களுக்கு இந்தியன் வங்கி மூலம் ரூ.76.36 ஆயிரம் வங்கிக்கடன் இணைப்பு வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல் உட்பட பலர் பங்கேற்றனர்.