Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டில் கிடந்த மணல் அகற்றம்

திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டில் கிடந்த மணல் அகற்றம்

திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டில் கிடந்த மணல் அகற்றம்

திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டில் கிடந்த மணல் அகற்றம்

ADDED : மே 30, 2025 03:10 AM


Google News
Latest Tamil News
சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாகதிருத்தங்கல் பஸ்ஸ்டாண்ட் எதிரே ரோட்டில் கொட்டிக் கிடந்த மணலை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

திருத்தங்கல் நகரில் பெரும்பாலான முக்கிய ரோடுகளில் இருபுறமும்பாதி அளவு மணல் கொட்டிக் கிடக்கின்றது. ரயில்வே கேட் அருகே, பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ரோடுகளில் பாதி அளவு மணல் நிறைந்து காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாகதிருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ரோட்டில் இருபுறமும் பாதி அளவு மணல் கொட்டிக் கிடக்கின்றது. ரோடை மணல்கள் ஆக்கிரமித்துள்ளதால் ரோடு குறுகி விட்டது. இதில் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி வழுக்கி விழுகின்றனர்.

எனவே திருத்தங்கல் நகர் முழுவதும் ரோட்டில் கிடக்கும் மணலை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக கமிஷனர் சரவணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட் எதிரே மற்றும் முக்கிய ரோடுகளில் கிடந்த மணல் அகற்றப்பட்டது. இதனால்வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us