Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

ADDED : ஜூன் 18, 2025 04:11 AM


Google News
சிறுமி மாயம்

சாத்துார்: ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் பாண்டியம்மாள், 45. இவரது 13 வயது மகள் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர் மாயமானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

கிணற்றில் மூழ்கி முதியவர் பலி

சாத்துார்: சாத்துார் சிறுக்குளத்தை சேர்ந்தவர் சுப்பா நாயக்கர், 83. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு இவருக்கு சொந்தமான பம்புசெட் தோட்டத்திற்கு சென்றார். மாலை 4:00 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்குள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். அவரது உடைகள் கிணற்றின் தடுப்புச் சுவரில் கிடந்தது. தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை சாத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us