ADDED : மார் 26, 2025 05:29 AM
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுடன் பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு பெற்றது.
இயற்பியல் தேர்வில் 6210 மாணவர்கள், 7535 மாணவிகள் என 13 ஆயிரத்து 745 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 6156 மாணவர்கள் 7474 மாணவிகள் என 13 ஆயிரத்து 630 மாணவர்கள் தேர்வெழுதினர். 115 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
பொருளியல் தேர்வில் 3524 மாணவர்கள், 3765 மாணவிகள் என 7289 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 3443 மாணவர்கள், 3697 மாணவிகள் என 7140 பேர் தேர்வெழுதினர். 149 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். வேலைவாய்ப்பு திறன்கள் தேர்வில் 17 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.