/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மண் ரோடால் அவதி; சேதமான நிழற்குடை சாத்துார் அச்சங்குளத்தில் மக்கள் அவதி மண் ரோடால் அவதி; சேதமான நிழற்குடை சாத்துார் அச்சங்குளத்தில் மக்கள் அவதி
மண் ரோடால் அவதி; சேதமான நிழற்குடை சாத்துார் அச்சங்குளத்தில் மக்கள் அவதி
மண் ரோடால் அவதி; சேதமான நிழற்குடை சாத்துார் அச்சங்குளத்தில் மக்கள் அவதி
மண் ரோடால் அவதி; சேதமான நிழற்குடை சாத்துார் அச்சங்குளத்தில் மக்கள் அவதி

ரோடு வசதி தேவை
தலைட்சுமி, குடும்பத் தலைவி: ஒரு தெருவில் மட்டுமே பேவர் பிளாக் ரோடு அமைத்து உள்ளனர். எல்லா தெருக்களும் பள்ளமாகவும் மண் ரோடாகவும் உள்ளது. மழைக்காலத்தில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நிற்கிறது.
கழிவுநீர் செல்லவில்லை
முத்துச்செல்வி, குடும்பத் தலைவி: நடுத்தெரு வடக்கு தெருவில் இருந்து புதியதாக வாறு கால் கட்டியுள்ளனர். இந்த வாறுகால் 3 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது. முறையாக ஊருக்கு வெளியே சென்று கழிவுநீர் சேர வேண்டும். ஆனால் வாறுகாலில் கழிவுநீர் செல்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது.
சேதமடைந்த நிழற்குடை
வளர்மதி, குடும்பத் தலைவி: சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என ஊராட்சி ஒன்றிய குழு தலைவரிடமும் கலெக்டரிடம் மனு கொடுத்தும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காட்சி பொருளாக குழாய்
தங்கமாரி, குடும்பத் தலைவி: ஊராட்சியில் வீட்டிற்கு வீடு புதிதாக குடிநீர் குழாய் அமைத்து ஓராண்டு ஆகிறது. இன்று வரை புதிய குழாயில் குடிநீர் வரவில்லை. இது காட்சி பொருளாகவே உள்ளது. பழைய குடிநீர் குழாயில் மட்டுமே குடிநீர் வருகிறது.