Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் பதிவு செய்ததற்கான குறுந்தகவல் வரலை மக்கள் புலம்பல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் பதிவு செய்ததற்கான குறுந்தகவல் வரலை மக்கள் புலம்பல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் பதிவு செய்ததற்கான குறுந்தகவல் வரலை மக்கள் புலம்பல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் பதிவு செய்ததற்கான குறுந்தகவல் வரலை மக்கள் புலம்பல்

ADDED : செப் 02, 2025 05:13 AM


Google News
விருதுநகர்: தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் சில மனுக்கள் பதிவு செய்ததற்கான குறுந்தகவல் வராததால் மனு அளித்த மக்கள் புலம்புகின்றனர்.

தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஜூலை 15 முதல் நவ. 7 வரை முகாம் நடக்கிறது. இம்முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். பட்டா மாறுதல், சொத்து வரி பெயர் மாற்றம், மின் கட்டண பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பல்வேறு உதவி தொகைகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற நடவடிக்கைகள் செய்யப்படுகிறது.

இதில் விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு குறுந்தகவல் வருவது வழக்கம். ஆனால் பட்டா மாறுதல் போன்ற வருவாய்த்துறை தொடர்பான சில மனுக்கள் அளிக்கப்பட்டாலும், வாங்கி வைத்துக் கொள்ளப்படுகிறது. இணையத்தில் பதிவேற்றாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் விண்ணப்பித்த பலர் குறுந்தகவல் ஏதும் வரவில்லை என புலம்புகின்றனர். மாநிலம் முழுதும் பல இடங்களில் இந்த பிரச்னை உள்ளது.

பட்டா விவகாரங்களில் குளறுபடி உள்ள காரணங்களால் நிராகரித்தால், அது முகாமில் பெற்று நிராகரிக்கப்பட்ட மனுக்கள் கணக்கில் வந்து விடும் என்பதால் இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. அரசு ஜீரோ நிராகரிப்பு, கொடுத்த அனைத்து மனுவுக்கும் தீர்வு என அறிவிக்க காத்திருப்பதால் இந்த நிலை ஏற்படுவதாக வருவாய்த்துறையினரே புலம்பு கின்றனர்.

மேலும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதில் ஆளும் கட்சியினரின் தலையீடும் அதிகம் உள்ளதால் அதிகாரிகள் திக்குமுக்காடு கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us