Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டியில் இருந்து மருத்துவமனை வழியாக இயக்கிய டவுன் பஸ் நிறுத்தம் பயணிகள் தவிப்பு

காரியாபட்டியில் இருந்து மருத்துவமனை வழியாக இயக்கிய டவுன் பஸ் நிறுத்தம் பயணிகள் தவிப்பு

காரியாபட்டியில் இருந்து மருத்துவமனை வழியாக இயக்கிய டவுன் பஸ் நிறுத்தம் பயணிகள் தவிப்பு

காரியாபட்டியில் இருந்து மருத்துவமனை வழியாக இயக்கிய டவுன் பஸ் நிறுத்தம் பயணிகள் தவிப்பு

ADDED : ஜூன் 27, 2025 12:33 AM


Google News
காரியாபட்டி:காரியாபட்டியில் இருந்து அரசு மருத்துவமனை வழியாக மதுரைக்கு இயங்கிய டவுன் பஸ் திடீரென நிறுத்தியதால் பயணிகள் தவித்து வருகின்றனர். மீண்டும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு 60க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. முதலில் பஜார் வழியாக வந்து சென்றது. அரசு மருத்துவமனை வழியாகவும் சில பஸ்களை இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டது.

இதனை ஏற்று முக்கு ரோடு, அரசு மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம் வழியாக 30 டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்நிலையில் ஒரு மாதமாக இந்த வழித்தடத்தில் இயங்கிய டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அரசு மருத்துவமனைக்கு நடந்து செல்ல முடியாமல், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆட்டோவில் செல்ல ரூ.100 செலவு ஏற்படுகிறது. கூலி வேலைக்கு சென்று வரும் கிராமப்புற மக்கள் ஆட்டோவுக்கு செலவு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

ஆசிரியர் காலனி, எழில்நகர், கிருஷ்ணா நகர் பகுதி பயணிகள், அரசு அலுவலர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என பலரும் மதுரைக்கு எளிதில் சென்று வந்தனர். தற்போது திடீரென நிறுத்தியதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

மீண்டும் வழக்கம்போல் அரசு மருத்துவமனை வழியாக மதுரைக்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us