Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பங்குனி பொங்கல் சாட்டுதல் வைபவம்

பங்குனி பொங்கல் சாட்டுதல் வைபவம்

பங்குனி பொங்கல் சாட்டுதல் வைபவம்

பங்குனி பொங்கல் சாட்டுதல் வைபவம்

ADDED : மார் 17, 2025 05:46 AM


Google News
விருதுநகர் : விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்கான சாட்டுதல் வைபவம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவின் சாட்டுதல் வைபவம் நேற்று நடந்தது. மார்ச் 30ல் கொடியேற்றமும், ஏப். 6ல் பங்குனிப் பொங்கல், ஏப். 7ல் கயிறு குத்து, அக்னிச்சட்டி எடுத்தல், ஏப். 8ல் தேரோட்டம், ஏப். 10ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டப்பட்டு கொடியிறக்கம் செய்யப்பட்ட பின் ஏப். 13ல் திருவிழா நிறைவடைகிறது.

மேலும் நேற்று நடந்த சாட்டுதல் வைபவத்தை முன்னிட்டு தெப்பம் சாட்டு பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திருவிழாவிற்கு 21 நாட்கள் உள்ள நிலையில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். ஏற்பாடுகளை ஹிந்து நாடார் தேவஸ்தான தலைவர் தங்கராஜன், செயலாளர் கனகவேல், பொருளாளர் பொன்னப்பன், நிர்வாகிகள் சுந்தரவேல், ஆனந்தவேல் ஆகியோர் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us