ADDED : செப் 01, 2025 02:09 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் சசி ஆனந்த் துவக்கி வைத்து, போட்டோகிராபி மலரை வெளியிட்டார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அமல்ஜித், ஸ்ரீலேகா, மாணவர்கள் செய்திருந்தனர்.