ADDED : ஜூன் 28, 2025 11:20 PM
சிவகாசி: சிவகாசியில் இளம் இந்திய தளிர் சார்பில் இளம் இந்திய நாடாளுமன்ற மாதிரி நிகழ்ச்சி நடந்தது.
இளம் இந்திய தளிர் மாநில பொறுப்பாளர் சண்முக நடராஜன் தலைமை வகித்தார். மாணிக்கம் தாகூர் எம்.பி., நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்கள், கட்டமைப்புகள், அதனுடைய செயல்பாடுகள் குறித்து விளக்கினார். சிவகாசி பகுதி சுற்றியுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இளம் இந்திய தளிர் நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.