/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தாழ்வாக செல்லும் மின்கம்பி, சகதியாகும் ரோடு தாழ்வாக செல்லும் மின்கம்பி, சகதியாகும் ரோடு
தாழ்வாக செல்லும் மின்கம்பி, சகதியாகும் ரோடு
தாழ்வாக செல்லும் மின்கம்பி, சகதியாகும் ரோடு
தாழ்வாக செல்லும் மின்கம்பி, சகதியாகும் ரோடு
தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்
பரணிராஜ், மில் தொழிலாளி: என்.ஜி.ஓ., காலனி மெயின் தெருவில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. காற்றுக்கு ஆடுவதால் வீடுகளில் உரசி விடுமோ என்று பீதியில் மக்கள் உள்ளனர். மின்வாரியத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. மின் கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சகதியாக மாறும் ரோடு
பெத்த பெருமாள், மில் தொழிலாளி: என்.ஜி.ஓ., காலனி தெருக்களில் மெட்டல் ரோடு தான் போடப்பட்டுள்ளது. இவற்றிற்கு தார் ரோடு அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மெட்டல் ரோடு சேதம் அடைந்துவிடும் நிலையில் உள்ளது. அதற்குள் தார் ரோடு அமைக்க வேண்டும். வாறுகால்களும் தெருக்களில் அமைக்கப்பட வேண்டும்.
வளர்ச்சிப் பணிகள் தேவை
சண்முகவேலு, வக்கீல்: என்.ஜி.ஓ., காலனி உருவாகி பல ஆண்டுகள் ஆனபோதிலும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. ரோடுகள், வாறு கால்கள், பொது கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும். ஊராட்சியில் தேவையான இடங்கள் இருந்தும் கட்டப்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.