Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாவட்டத்தில்  இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்

மாவட்டத்தில்  இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்

மாவட்டத்தில்  இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்

மாவட்டத்தில்  இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்

ADDED : மே 15, 2025 12:41 AM


Google News
விருதுநகர்,; விருதுநகர் மாவட்டத்தில் இன்று(மே 15) முதல் ஜமாபந்தி துவங்குகிறது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

அவரது செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் 1434ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் எனும் ஜமாபந்தி 2025மே 15 - 16 வரை, மே 20 - 22 வரை, மே 27- 28 வரை தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது.

சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர்தலைமையில் மே 15, 16, 17, 21, 22 ஆகிய 5 நாட்களும், விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில்டி.ஆர்.ஓ., தலைமையில் மே 15, 16, 20, 23, 27 ஆகிய 7 நாட்களும், ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் சிவகாசி சப் கலெக்டர் தலைமையில் மே 15, 16, 20 - 22 ஆகிய 5 நாட்கள், சாத்துார் தாசில்தார் அலுவலகத்தில்ஆர்.டி.ஓ., தலைமையில்மே 15, 16, 20 - 22 ஆகிய 5 நாட்கள், அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் மே 15, 16, 20-23, 27 ஆகிய 7 நாட்கள், காரியாபட்டி தாசில்தார் அலுவலகத்தில்மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில் மே 15, 16, 20 - 23 ஆகிய 6 நாட்கள், வெம்பக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தலைமையில் மே 15, 16, 20 - 22 ஆகிய 5 நாட்கள், திருச்சுழி தாசில்தார் அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் தலைமையில் மே 15, 16, 20 - 23, 27, 28 ஆகிய 8 நாட்கள், ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தார் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் தலைமையில் மே 15, 16, 20 ஆகிய 3 நாட்கள், வத்திராயிருப்பு தாசில்தார் அலுவலகத்தில் தாட்கோ மாவட்ட மேலாளர் தலைமையில், மே 15, 16, 20 ஆகிய 3 நாட்களும் நடக்க உள்ளது.

கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள்,பட்டா மாறுதல், நில ஒப்படை, நில நிர்வாகம், வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் பொதுமக்கள் நேரில் அளித்து பயன்பெறலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us