ADDED : ஜூன் 08, 2025 05:31 AM
சாத்துார் : சிப்பிப்பாறையைச் சேர்ந்தவர் பற்குண ஜோதி 30.
இவர் கணவர் பொன்னுச்சாமி 34. தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மது போதையில் வந்த அவர் மனைவியை களை பிடுங்கும் கரண்டியால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். கணவரை ஏழாயிரம்பண்ணை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.