ADDED : அக் 16, 2025 11:55 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் ஆவரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்தவர் சடையம்மாள் 85, கணவர் இழந்த நிலையில் மகன் பால்ராஜ் 63, உடன் வசித்து வருகிறார்.
வீட்டின் முன்பக்க சுவர் தொடர் மழையால் இடிந்து விழுந்தது.
வீட்டின் உள் பகுதியில் விழாமல் வெளிப்புறம் விழுந்ததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சேதத்திற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


