/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நகராட்சி ஓடைகள் துார்வாராததால் சுகாதாரக்கேடு --நீர் நிலைகள் மீண்டும் மாசு நகராட்சி ஓடைகள் துார்வாராததால் சுகாதாரக்கேடு --நீர் நிலைகள் மீண்டும் மாசு
நகராட்சி ஓடைகள் துார்வாராததால் சுகாதாரக்கேடு --நீர் நிலைகள் மீண்டும் மாசு
நகராட்சி ஓடைகள் துார்வாராததால் சுகாதாரக்கேடு --நீர் நிலைகள் மீண்டும் மாசு
நகராட்சி ஓடைகள் துார்வாராததால் சுகாதாரக்கேடு --நீர் நிலைகள் மீண்டும் மாசு
விவசாயிகளுக்கு தொடர் வேதனை
-ராமச்சந்திர ராஜா, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: சுத்தமான கண்மாய் தண்ணீரை ஆதாரமாக வைத்து விவசாயம் செய்த நிலை காணாமல் போய் வருகிறது. பாதாள சாக்கடை செயல்பாட்டிற்கு வந்தவுடன் இந்நிலை மாறி விடும் என நினைத்த போதும் ஏற்கனவே வடிகால் ஓடைகளில் உள்ள சாக்கடைகளை அகற்றாததால் பெரியாதி குளம், கொண்டநேரி, புளியங்குளம், கடம்பன்குளம், பிரண்டகுளம் கண்மாய்கள் அதே பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு தொடர் வேதனை தான்.
வீடுகளுக்குள் கழிவு நீர்
-சுப்பிரமணியன், குடியிருப்புவாசி: லேசான மழை பெய்தாலே மண் மேவியுள்ள சாக்கடைகள் மழை நீரில் கலந்து வீடுகளுக்கும், இந்திரா நகர் போன்ற மழை நீர் வடிகாலின் கடைசி பகுதிகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. சாக்கடை அடைப்பினால் டெங்கு உயிரிழப்பிற்கு முன்னோடியான ராஜபாளையம் நகராட்சி மீண்டும் பழைய கெட்ட பெயரை பெறுவதற்குள் வடிகால்களை துார்வார வேண்டும்.
தீர்வு
பொதுப்பணித்துறை, வருவாய் துறையின் கீழ் வரும் மழைநீர் வடிகால்கள் ஓடைகளை முறையாக கணக்கீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடியிருப்பு வாசிகள் ஓடைகளில் குப்பைகள் கொட்டுவதை கண்காணித்து அபராதம் விதிக்கவும், நீர் வரத்து ஓடைகளில் கடந்து செல்ல பாதை என்ற பெயரில் தேவையின்றி தடுப்புகள் ஏற்படுத்த ஆட்சேபனை தெரிவிப்பதுடன், தொடர் இடைவெளிகளில் புதர்கள் வளர்ந்து பாதிப்பதை அகற்ற உடனடி அனுமதி வழங்க வேண்டும்.