/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தனிநபர் கழிப்பறைக்கு மானியம் வழங்காததால் தவிப்பு தனிநபர் கழிப்பறைக்கு மானியம் வழங்காததால் தவிப்பு
தனிநபர் கழிப்பறைக்கு மானியம் வழங்காததால் தவிப்பு
தனிநபர் கழிப்பறைக்கு மானியம் வழங்காததால் தவிப்பு
தனிநபர் கழிப்பறைக்கு மானியம் வழங்காததால் தவிப்பு
விரைந்து நிதி ஒதுக்கப்படுமா
பாண்டி, தனியார் ஊழியர்: மல்லாங்கிணரில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதால் புறவழிச் சாலை அமைக்க வேண்டி நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ரூ.16 கோடி செலவாகும் என அறியப்பட்டது. முதற்கட்டமாக வரலொட்டியிலிருந்து பிரிந்து முடியனூர் விலக்கு வரை 4.5 கி.மீ., தூரத்திற்கு அளவீடு செய்யும் பணி 3 மாதங்களாக நடைபெற்று, முடிந்தது. அதோடு நின்று விடாமல், ரோடு அமைக்க, விரைந்து நிதி ஒதுக்கி பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயன்பாட்டிற்கு கொண்டு வாங்க
மகேந்திரன், வக்கீல்: பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் மராமத்து செய்து நல்ல நிலையில் உள்ளது. ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் வாடகைக்கு எடுத்து விசேஷ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். தற்போது, விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வழங்குவதை நிர்வாகம் நிறுத்தி உள்ளது. திருமண மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, விசேஷம் வைப்பவர்களுக்கு வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானியத்திற்காக காத்திருப்பு
ஆற்றல் அரசு, தனியார் ஊழியர்: ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிப்பறை கட்ட அரசு மானியத்துடன் திட்டத்தை செயல்படுத்தியது. பெரும்பாலானவர்கள் கழிப்பறை கட்டினர். மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பல ஆண்டுகளாகியும் இதுவரை கிடைக்கவில்லை.