Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பராமரிப்பின்றி கிடக்கும் குளியல் தொட்டிகள் பயன்படுத்த எதிர்பார்ப்பு

பராமரிப்பின்றி கிடக்கும் குளியல் தொட்டிகள் பயன்படுத்த எதிர்பார்ப்பு

பராமரிப்பின்றி கிடக்கும் குளியல் தொட்டிகள் பயன்படுத்த எதிர்பார்ப்பு

பராமரிப்பின்றி கிடக்கும் குளியல் தொட்டிகள் பயன்படுத்த எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 08, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் உள்ள முருகையாபுரம், மேலதுலுக்கன்குளம், வி. நாங்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரூ. பல லட்சம் செலவில் குளியல் தொட்டிகள் கட்டப்பட்டது. அவை அருகே ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க வசதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மக்கள் பெரிதும் பயனடைந்தனர். கால்நடைகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் ஒரு சில இடங்களில் மின் மோட்டார் பழுதடைந்ததால் அதனை பழுது நீக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பாமல் கிடப்பில் போட்டதால் பெரும்பாலான இடங்களில் பயன்பாடு இன்றி போனது.

கேட்பாரற்று கிடப்பதால் மின் மோட்டார்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் காணாமல் போகின்றன. அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. குளிக்க, துணி துவைக்க, கால்நடைகளை பராமரிப்பதில் சிரமம் என படாத பாடு படுகின்றனர். சில இடங்களில் பயன்பாட்டில் இருந்தாலும் சுற்று சுவர் சேதம், பாசி படர்ந்து போதிய பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வெளியேறி வருகிறது.

நீர் நிலைகளை தேடி செல்ல வேண்டி இருப்பதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குளியல் தொட்டியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us