ADDED : பிப் 24, 2024 05:48 AM
விருதுநகர் : விருதுநகரில் விடீட்சியா, ஜேகாம் அமைப்பு சார்பில் தொழில் முனைவோர்களின் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இதில் விடீட்சியா தலைவர் தொழிலதிபர் முத்து, செயலாளர் குருசாமி, ஜேகாம் முன்னாள் மண்டல சேர்மன் ராதாகிருஷ்ணன், விருதுநகர் சேர்மன் விஜயவேல் தலைமைவகித்து பேசினர்.
தொழில்முனைவோர்கள்ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து தொழில் வளத்தை பெருக்க அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே தொழில் துவங்கியோருக்கு அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது.