ADDED : செப் 22, 2025 03:25 AM
விருதுநகர் : விழுப்புரம் மாவட்டம் மோட்சகுளம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் 39. இவர் தற்போது ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார்.
இவர் காரில் செப். 19ல் இரவு 11:30 மணிக்கு விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சென்ற போது மோதியதில் ரோட்டை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத முதியவர் பலியானார்.
பஜார் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிந்தனர்.