ADDED : ஜூன் 05, 2025 12:52 AM
விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூரைக்குண்டு ஊராட்சியின் அல்லம்பட்டி, பாலம்மாள் நகர், முத்துராமலிங்கம் நகர் பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி சாவித்திரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூ., கிளைச் செயலாளர் செல்வக்குமார், நகரச் செயலாளர் ஜெயபாரத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.