Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் சேதம் அடைந்துள்ள சாக்கடை மூடி

சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் சேதம் அடைந்துள்ள சாக்கடை மூடி

சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் சேதம் அடைந்துள்ள சாக்கடை மூடி

சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் சேதம் அடைந்துள்ள சாக்கடை மூடி

ADDED : ஜூன் 01, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
சிவகாசி: சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் சேதம் அடைந்துள்ள சாக்கடை மூடியால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர்.

சிவகாசி பழைய விருதுநகர் ரோடு, பசும்பொன் ரோடு விலக்கில் கழிவுநீர் மழை நீர் வெளியேறி செல்வதற்கு ஏதுவாக வாறுகால் ரோட்டின் அடியில் செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டால் சரி செய்வதற்காக அமைக்கப்பட்ட திறந்தவெளியை மூடுவதற்காக இரும்பு குழாயினால் ஆன மூடி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அச்சகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளதால் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.

இந்த வாகனங்கள் இரும்பு குழாய் மூடி மீது ஏறிச் செல்வதால் சேதமடைந்து இரும்பு குழாய் வெளியே நீட்டி கொண்டிருக்கிறது. மூன்று ரோடு பிரியும் இடத்தில் இவ்வாறு இருப்பதால் டூ வீலர், சைக்கிளில் நடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். தவிர கார் உள்ளிட்ட வாகனங்கள் இரும்பு மூடி மீது தெரியாமல் ஏறிச் செல்லும் போது விபத்தில் சிக்குகிறது.

எனவே இதனை அகற்றிவிட்டு தரமான மூடி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us