ADDED : ஜன 14, 2024 11:55 PM
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு டேலண்ட்சியா 2024 பல திறன் கலை நிகழ்ச்சிகள் கல்லுாரித் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது.
செயலாளர் சர்ப்பராஜன், கல்லுாரி முதல்வர் சாரதி முன்னிலை வகித்தனர். உபதலைவர்கள் ரம்யா, ராஜமோகன், பொருளாளர் சக்திபாபு, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


