ADDED : பிப் 25, 2024 06:06 AM
விருதுநகர், : விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
திருவாரூர் தமிழக மத்திய பல்கலை பேராசிரியர் கிருஷ்ணன், கல்லுாரி செயலர் கோவிந்தராஜப்பெருமாள், தேர்வு கண்காணிப்பாளர் கார்த்திகைலட்சுமி, கல்லுாரி முதல்வர் மீனா ராணி, துறைத் தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இளங்கலை மாணவர்கள் 1043 பேர், முதுகலை மாணவர்கள் 173 பேர் பட்டம் பெற்றனர்.