/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பஸ் டூவீலரில் மோதி கல்லுாரி மாணவர் பலிபஸ் டூவீலரில் மோதி கல்லுாரி மாணவர் பலி
பஸ் டூவீலரில் மோதி கல்லுாரி மாணவர் பலி
பஸ் டூவீலரில் மோதி கல்லுாரி மாணவர் பலி
பஸ் டூவீலரில் மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஜன 11, 2024 05:08 AM

சிவகாசி : சிவகாசி அணில் காலனியைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சரவணன் 18. பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வந்தார். இவரது நண்பர் ரிசர்வ் லைனன் முருகன் மகன் கார்த்திகேயன் 18, தனியார் கல்லுாரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் சரவணன் டூ வீலர் ஓட்ட ( ஹெல்மெட் அணியவில்லை) கார்த்திகேயன் பின்னால் அமர்ந்து விருதுநகர் ரோட்டில் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே மதுரை சமத்துவபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் 34, ஓட்டி வந்த தனியார் பஸ் மோதியதில் சரவணன் இறந்தார். கார்த்திக் காயமடைந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.