ADDED : ஜன 12, 2024 12:35 AM
விருதுநகர்: விருதுநகரில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கு, பேச்சு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலை பள்ளி, தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செந்தில்குமார நாடார் கல்லூரிகளில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், சட்டசபை முன்னாள் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் கருத்தரங்கு நடந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டசபை மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேசினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.
சட்ட பேரவை இணை செயலாளர் தேன்மொழி, விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.