Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பெண் பிணம் எரிப்பு4 பேர் மீது வழக்கு

பெண் பிணம் எரிப்பு4 பேர் மீது வழக்கு

பெண் பிணம் எரிப்பு4 பேர் மீது வழக்கு

பெண் பிணம் எரிப்பு4 பேர் மீது வழக்கு

ADDED : ஜூன் 11, 2025 07:06 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரத்தில் போலீசிற்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணின் பிணத்தை எரித்த சம்பவத்தில் அவரது கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

சேத்துாரைச் சேர்ந்த தவசி மகள் மலையரசி 33. இவருக்கு குமார் உடன் திருமணமாகி மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில், சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் முடித்து இருவரும் மம்சாபுரம் தட்டப்பாறை அருகில் உள்ள அய்யனார் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ள தென்னந்தோப்பில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் மே 15 இரவு 9:00 மணிக்கு தோப்பில் வைத்து மலையரசி இறந்தார். தகவலறிந்த தந்தை தவசி, நேரில் வந்த போது இரவோடு இரவாக மலையரசி உடலை எரித்து விட்டதாக கணவர் முருகன் கூறினார்.

தவசி மம்சாபுரம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து தடயத்தை மறைத்ததாக கணவர் முருகன், மம்சாபுரத்தை சேர்ந்த காளிமுத்து, முனியாண்டி, வைரமுத்து ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us