ADDED : அக் 16, 2025 11:50 PM
சாத்துார்: சாத்துாரில் சி.இ.ஓ.ஏ. பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்பஸ் ஸ்டாண்ட் முதல் முக்குராந்தல் வரை சுத்தம் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
பள்ளியின் இயக்குனர் பாக்கியநாதன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் குருசாமி ஊர்வலத்தை துவக்கினார்.
மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பிய படி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.
தமிழ் ஆசிரியர் சுரேஷ் முதல்வர் தாட்சாயினி தேவி ,உதவி தலைமை ஆசிரியர் ராஜா , ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.


