Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

ADDED : ஜூன் 13, 2025 02:39 AM


Google News
சாத்துார்: சாத்துாரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. எஸ்.எச்.என்., எட்வர்ட் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிபதி செல்வி இலக்கியா,சார்பு நீதிபதி முத்து மகாராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

ஆர்.டி.ஓ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். தாசில்தார் ராஜா மணி வாழ்த்தினார். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. கையெழுத்து இயக்கம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us