ADDED : மே 22, 2025 12:26 AM
சாத்துார்: சாத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு ,போதை ஒழிப்பு உறுதி மொழியும் ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர், பயிற்சி அலுவலர் பார்வதி தலைமை வகித்தனர். மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்திரகலா, கோட்ட கலால் அலுவலர் சாந்தி ஆகியோர் மாணவர்களிடம் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உறுதிமொழி எடுக்க வைத்தனர். விடுதி கண்காணிப்பாளர் சுப்பையா நன்றி கூறினார். மாணவர்கள் கலந்து கொண்டனர்.