/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/70,337 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர் தகவல்70,337 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர் தகவல்
70,337 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர் தகவல்
70,337 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர் தகவல்
70,337 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர் தகவல்
ADDED : ஜன 11, 2024 04:38 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 2023ல் ஆண்டில் 70,337 கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செலுத்தப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராஜபாளையம், சாத்துார், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்துார், வத்தராயிருப்பு, திருச்சுழி உள்ளிட்ட நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள ஊரகப்பகுதிகளில் மொத்தம் 2,12,463 மாடுகள் உள்ளது.
இவற்றிற்கு கால்நடை மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் குடற்புழு நீக்குதல், தடுப்பூசி, செலுத்துதல், செயற்கை முறை கருவூட்டல், மலட்டு நீக்க சிகிச்சை, சினை சரிபார்ப்பு, சிறு அறுவை சிகிச்சை, நோய்களை கண்டறிதல், தாது உப்பு கலவை விநியோகம் போன்றவை செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்தம் 70,337 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டுள்ளது. கருவூட்டல் செய்யப்பட்ட கால்நடைகள் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நல்ல நிலையில் குட்டிகளை ஈன்றுள்ளனர். பிரசவித்தல் சமயத்தில் ஏற்படும் சிக்கலை தடுப்பதற்காக முன் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இணை இயக்குனர் தியோபிலஸ் ரோஜர் தெரிவித்தார்.