Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரமணாஸ் கல்லுாரியில் பணி ஆணை பெற்றவர்களுக்கு பாராட்டு

ரமணாஸ் கல்லுாரியில் பணி ஆணை பெற்றவர்களுக்கு பாராட்டு

ரமணாஸ் கல்லுாரியில் பணி ஆணை பெற்றவர்களுக்கு பாராட்டு

ரமணாஸ் கல்லுாரியில் பணி ஆணை பெற்றவர்களுக்கு பாராட்டு

ADDED : மே 17, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் பணி ஆணை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

கல்லுாரியில் ஆப்பிள் ஐபோன் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 24 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பணியாணை வழங்கப்பட்டது. அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., மதிவாணன், மலேசிய தொழிலதிபர் மோகன்ராஜ் தலைமை வகித்தனர்.

கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன், கலைக்கல்லுாரி செயலாளர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், போக்குவரத்து செயலர் விக்னேஷ், இயக்குனர் சுப்பிரமணியம், முதல்வர் தில்லைநடராஜன், துணை முதல்வர் பெர்ணா கலந்து கொண்டனர்.

மதுரை காமராஜர் பல்கலைத் தேர்வில் தேர்வு எழுதிய மாணவிகளில் 11 மாணவிகள் ரேங்க் பெற்று உள்ளனர். இந்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us