Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

ADDED : செப் 23, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
சிவகாசி: ராணுவ முகாம்களில் பங்கேற்று விருதுகளை பெற்ற சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி மாணவர்களை தாளாளர் சோலைசாமி பாராட்டினார்.

டெல்லியில் 12 நாட்கள் நடந்த அகில இந்திய தாள் சைனிக் முகாமிற்கு கணிப்பொறியியல் துறை மாணவி சவுபர்ணிகா தேர்வு செய்யப்பட்டு அங்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக கமோடோர் ராகவ் , மாணவிக்கு பாராட்டு சான்றிதழ், விருது வழங்கினார்.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஏழு நாட்கள் நடந்த ஆர்மி அட்டாச்மென்ட் முகாமில் பி.எஸ்.ஆர்., கல்லுாரி உயிர் மருத்துவ துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர் வெள்ளத்துரை பெஸ்ட் ட்ரில் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார். இவருக்கு கர்ணல் விஷால் சிங் மேத்தா தங்கப்பதக்கம் வழங்கினார்.

மாணவர்களை கல்வி குழுமம் தாளாளர் சோலைச்சாமி இயக்குனர்கள் அருண்குமார் விக்னேஸ்வரி முதல்வர் செந்தில்குமார் டீன் மாரிசாமி , துறைத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், செந்தில், என்.சி.சி., ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us