ADDED : ஜூன் 26, 2025 12:48 AM
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 10:00 மணி வரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கோயிலில் மதியம் 12:00 மணிக்கு மேல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.