ADDED : ஜூன் 29, 2024 04:39 AM
நரிக்குடி, நரிக்குடி வரிசையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மரம் நடுதல், யோகாசனம், தீவிர மாணவர் சேர்க்கை விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் செல்வமணி தலைமை வகித்தார். ஆசிரியர் கிருஷ்ணசாமி வரவேற்றார். பள்ளி வளாகத்தில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டன. யோகாசனப் போட்டி நடந்தது.
அரசு பள்ளியில் பயின்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து விளக்கி கூறி, தீவிர மாணவர் சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, முத்து மணி, வேலுத்தாய், ராமலட்சுமி செய்திருந்தனர்.