Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆறு மாதத்தில் 850 கிலோ தடை புகையிலை பறிமுதல் ரூ.42.60 லட்சம் அபராதம்

ஆறு மாதத்தில் 850 கிலோ தடை புகையிலை பறிமுதல் ரூ.42.60 லட்சம் அபராதம்

ஆறு மாதத்தில் 850 கிலோ தடை புகையிலை பறிமுதல் ரூ.42.60 லட்சம் அபராதம்

ஆறு மாதத்தில் 850 கிலோ தடை புகையிலை பறிமுதல் ரூ.42.60 லட்சம் அபராதம்

ADDED : ஜூலை 04, 2024 12:53 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் 850 கிலோ தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.42.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு 178 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் 2024 ஜன. 1 முதல் ஜூன் 22 வரை உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து 427 முறை தடை புகையிலை பதுக்கல், விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் 729.5 கிலோ தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 165 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 10 வாகனங்கள் பறிமுதல் செய்து ரூ. 38 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜூன் 23 முதல் ஜூன் 29 வரை ஒரு வாரத்தில் 13 கடைகள், 3 வாகனங்களில் இருந்து 121 கிலோ தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தடை புகையிலை முதல் முறை விற்பனை செய்தால் ரூ. 25 அபராதம், 15 நாட்களுக்கு கடைக்கு சீல், இரண்டாவது முறை விற்பனை செய்தால் ரூ. 50 ஆயிரம் அபராதம், ஒரு மாதம் சீல், மூன்றாவது முறை விற்பனை செய்தால் ரூ. 1 லட்சம் அபராதம், மூன்று மாதம் சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us