ADDED : ஜூலை 13, 2024 07:14 AM
விருதுநகர் : வெம்பக்கோட்டை செவல்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கம்பு ரகம் சி.ஓ.10 விதைப்பண்ணையை சென்னை உயிர்மச்சான்று உதவி இயக்குனர் வானதி ஆய்வு செய்தார்.
விதைப்பண்ணையில் விதை ஆதாரம் சரிபார்த்தல்,பயிர் எண்ணிக்கை, பராமரிப்பு, கலவன் பயிர்களை நீக்கல், விதைப்பண்ணை விதைச்சான்று நடைமுறைகளின் படி பின்பற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். வெம்பக்கோட்டை வெற்றிலையூரணியில் ராமசாமி என்பவரின் உயிர்மபண்ணைையை ஆய்வு செய்தார்.