வேண்டும் அவசர வழி
-வேலாயுதம், ரோட்டரி சங்க நிர்வாகி: தற்போது அரசு மருத்துவமனையின் பிரதான வாசல் வழியாக தான் மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். அவர்களின் வாகனங்களும் வந்து செல்கிறது. விபத்து மற்றும் உயிர் காக்கும் நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறவும், ஆம்புலன்ஸ்கள் எளிதில் வந்து செல்லவும் அவசர வழி உருவாக்குவது அவசியம். இதற்கு உழவர் சந்தையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு அவசர வழியை ஏற்படுத்த வேண்டும்.
இடையூறு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்
-ராஜசேகர், ரோட்டரி நிர்வாகி: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான மக்கள்சிகிச்சை பெற வந்து செல்லும் நிலையில் அவர்கள் சிரமமின்றி வந்து செல்ல இடையூறு இல்லாதநிலையை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைக்கு வரும் அனைத்து ரோடுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அப்புறப்படுத்த வேண்டும்.
தீர்வுகள்
உழவர் சந்தையில் இருந்து அரசு மருத்துவமனையின் வடக்கு வாசல் வழியாக அவசர வழி ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனை சுற்றியுள்ள நகராட்சி வாகன காப்பகங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஆக்கிரப்புகளை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ்கள் எளிதில் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.