ADDED : ஜூலை 07, 2024 11:49 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் மின் கோட்ட செயற்ப் பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு: ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜூலை 9 காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்டறிய இருப்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.