ADDED : மார் 13, 2025 04:30 AM
அரசு பஸ் மோதி
முதியவர் பலி
ராஜபாளையம்:
சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் காத்தான் 85, மனைவி இறந்த நிலையில் மகன் ராஜகுருவுடன் சலுான் கடை வைத்து தொழில் செய்கிறார்.
நேற்று முன்தினம் கடையிலிருந்து வீட்டிற்கு டூவீலரில் வந்த போது பின்னால் வந்த அரசு பஸ் டூவீலரின் பின்புறம் மோதியதில் படுகாயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த டிரைவர் செல்வம் மீது தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.