ADDED : ஜூலை 21, 2024 04:19 AM
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே கீழ ராஜகுலராமன் வி.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாரி 42, ஐந்து வருடங்களாக கீழ ராஜகுலராமன் கிராம துாய்மை பணியாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் துாய்மை பணியை மேற்கொண்ட போது வி.புதுார் தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி 74, குப்பை வாங்க தாமதமாக வருவது குறித்து கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பிளாஸ்டிக் குப்பை கூடையால் துாய்மை பணியாளர் பூமாரியை தாக்கியுள்ளார். கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.