ADDED : ஜூன் 22, 2024 04:45 AM
மதுவால் பலி
சாத்துார்: சாத்துார் உப்பத்துாரை சேர்ந்தவர் கருப்பசாமி, 44.
மது பழக்கம் காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றனர். இந்த நிலையில் தாயார் ஆறுமுகத்தா, 68.யுடன் வசித்து வந்தார். தொடர்ந்து மது குடித்து வந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.