ADDED : மார் 15, 2025 04:59 AM

விருதுநகர்: 70 வயதுக்கு மேல் ஆனால் 10 சதவீதம் கூடுதல் பென்சன், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.
செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். அனைத்து ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் கலந்து கொண்டனர்.