Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : மார் 15, 2025 04:57 AM


Google News
மதுரை:' விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் தற்போதைய பழைய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தற்காலிக கடைகளை அகற்ற தாக்கலான வழக்கில், மனுவை அதிகாரிகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் மாரியப்பன் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஸ்ரீவில்லிபுத்துார் மைய பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இட வசதி பற்றாக்குறையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் மைய பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் இடையூறு ஏற்படுகிறது.

மாற்றாக ஸ்ரீவில்லிபுத்துார் -சிவகாசி மெயின் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். அதுவரை தற்போதைய பழைய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தற்காலிக கடைகளை அகற்றக்கோரி நகராட்சி நிர்வாக கமிஷனர், விருதுநகர் கலெக்டர், ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us