/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குப்பையை எரிப்பதால் சுகாதாரக்கேடு; விரட்டி கடிக்கும் வெறி நாய்கள் அல்லல்படும் அருப்புக்கோட்டை அன்பு நகர் மக்கள் குப்பையை எரிப்பதால் சுகாதாரக்கேடு; விரட்டி கடிக்கும் வெறி நாய்கள் அல்லல்படும் அருப்புக்கோட்டை அன்பு நகர் மக்கள்
குப்பையை எரிப்பதால் சுகாதாரக்கேடு; விரட்டி கடிக்கும் வெறி நாய்கள் அல்லல்படும் அருப்புக்கோட்டை அன்பு நகர் மக்கள்
குப்பையை எரிப்பதால் சுகாதாரக்கேடு; விரட்டி கடிக்கும் வெறி நாய்கள் அல்லல்படும் அருப்புக்கோட்டை அன்பு நகர் மக்கள்
குப்பையை எரிப்பதால் சுகாதாரக்கேடு; விரட்டி கடிக்கும் வெறி நாய்கள் அல்லல்படும் அருப்புக்கோட்டை அன்பு நகர் மக்கள்
சுவாச கோளாறு
ஹேமா, குடும்ப தலைவி : அன்பு நகரின் ஒரு சில பகுதிகளில் குப்பையை மொத்தமாக கொட்டி தீ வைப்பதால் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. மூச்சு திணறல். கண் எரிச்சலால் நாங்கள் அவதிப்படுகிறோம். குப்பையை எரிக்காமல் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் இங்கு குப்பையை எரிப்பது தொடர் கதையாக உள்ளது.
வாறுகால் இல்லை
ஜெயந்தி, குடும்ப தலைவி : அன்பு நகர் 3 வது தெருவில் வாறுகால் வசதி இல்லை. கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது. ரோடு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் நடக்க முடியவில்லை. தெரு விளக்கு இல்லாமலும் சிரமப்படுகிறோம்.
நாய்கள் தொல்லை
கணேசன், நெசவாளர்: அன்பு நகரில் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இவற்றில் பல வெறிபிடித்து உள்ளது. தெருக்களில் வருபவர்களை விரட்டி கடிக்கிறது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சியில் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. பள்ளி மாணவர்கள் பயந்து கொண்டே தான் பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது. இந்தப் பகுதியில் நாய் கடிக்கு ஆளானோர் அதிகமானவர்கள் உள்ளனர்.