Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலம் பொற்காலம் கவர்னர் ரவி பேச்சு

முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலம் பொற்காலம் கவர்னர் ரவி பேச்சு

முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலம் பொற்காலம் கவர்னர் ரவி பேச்சு

முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலம் பொற்காலம் கவர்னர் ரவி பேச்சு

ADDED : ஜூலை 13, 2024 09:47 PM


Google News
Latest Tamil News
விருதுநகர்:முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலம் என விருதுநகரில் கவர்னர் ரவி பேசினார்.

விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் கவர்னர் பேசியதாவது: இந்தியாவில் சிறந்த மனிதர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் காமராஜர். இளம் வயதில் தந்தையை பறிகொடுத்தும், 16 வயதில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று அரசியலில் நுழைந்தவர்.

அவர் ஆட்சி செய்த 1954 முதல் 1963 வரையான 9 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம். அப்போது ஆரம்ப உயர்நிலைக்கல்வி பயில மாணவர்கள் பல கி.மீ., செல்வதை குறைக்க தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அதனால் தான் இன்று இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 600 ஆண்டுகளுக்கு முன்பு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீமந்த் சங்கர் தேவ், தனது 30 வயதில் ராமேஸ்வரம், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு வந்து தங்கி கல்வி பயின்றுள்ளார்.

இந்தியாவின் முதல் ஐ.ஐ.டி., சென்னையில் உருவாகவும், தமிழகத்தில் அதிக தொழில் நிறுவனங்கள் இருப்பதற்கும் காமராஜர் மட்டுமே காரணம். பிரதமராக நேரு இருந்த சமயத்தில் அப்போதே நெய்வேலி லிங்க்னைட் கார்ப்பரேஷன் அதிக லாபம் ஈட்ட முக்கிய காரணமாக இருந்தவர். தமிழகத்தில் 13க்கும் மேற்பட்ட மிகப்பெரிய அணைகளை கட்டி விவசாயம், நீர்வளம் பெருகுவதற்கு வழிவகை செய்தவர். இன்று நாம் பேசும் சமூக நீதியை, அன்றே நிலை நிறுத்தியவர்.

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 66 பேர் பலியாகியுள்ளனர். இதே செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாரயம் குடித்து 24க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் 14 மாதங்களுக்கு பின் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மக்களுக்கான நியாயம் உரிய காலத்தில் கிடைக்காமல் இருப்பது கண்டிக்கக்கூடியது. தமிழகத்தில் இன்றும் அதிக அளவிலான ஏழைகள் உள்ளனர். பிரதமர் மோடி அறிவித்த முன்னேற துடிக்கும் மாவட்டங்கள் பட்டியலில் விருதுநகர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. அதனால் இங்கு விரைவில் தொழில் வளம் பெருகி வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us